Menu Close

விசுவாச அறிக்கை

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய ஏகசுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.

இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.

போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன்.

ஏக,பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவாசிக்கிறேன்.

புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவாசிக்கிறேன்.

பாவப்புறுத்தலை விசுவாசிக்கிறேன்.

நித்திய சீவியத்தை விசுவாசிக்கிறேன்.

Show Buttons
Hide Buttons